Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம், பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
எம்.டி.ஸ் - ரீபார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எழில், ஐடி மேலாளர் ஜாண் சுந்தர் மற்றும் மேலாளர்ரெக்ஸ் லூர்துராஜ் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். நேர்முகத் தேர்வில் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வான 2 மாணவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப் பட்டது.
தேர்வுபெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்துத் துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.
நேர்முகத் தேர்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் செய்திருந்தனர்.